வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் ஒரு முன்முயற்சியான பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான ஸ்வநிதி திட்டம், நாடு முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு அதன் ஆதரவை வழங்குவதன் மூலம் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
தெருவோர வியாபாரிகள் நீண்ட காலமாக நகர்ப்புற முறைசாரா பொருளாதாரத்தில் ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டுள்ளனர், நகர்ப்புற குடியிருப்பாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறார்கள். பிரதமரின் ஸ்வநிதி திட்டம் அவர்களை முறையான பொருளாதார வளையத்திற்குள் கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பிரதமர் ஸ்வநிதி திட்டம் பற்றி
ஜூன் 1, 2020 அன்று தொடங்கப்பட்ட பிரதமரின் தெருவோர வியாபாரிகளின் தற்சார்பு நிதி (பிஎம் ஸ்வநிதி) திட்டம் நகர்ப்புற தெருவோர வியாபாரிகளுக்கான நுண் கடன் திட்டமாகும், இது ரூ.50,000 வரை பிணையற்ற செயல்பாட்டு மூலதன கடன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வழக்கமான திருப்பிச் செலுத்துதல் 7% வட்டி மானியத்துடன் ஊக்குவிக்கப்படுகிறது மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சியைப் பயன்படுத்துகிறது. மேலும் விண்ணப்ப நிலை புதுப்பிப்புகளுக்கு எஸ்எம்எஸ் அடிப்படையிலான அறிவிப்புகளைப் பயன்படுத்துகிறது. என்.பி.எஃப்.சி / எம்.எஃப்.ஐ மற்றும் டி.பி.ஏக்கள் உள்ளிட்ட அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களும் இந்தியாவில் நகர்ப்புற வறுமையைப் போக்கும் நோக்கத்துடன் கூட்டு சேர்ந்துள்ளன