அதிவேக இணைய வசதியை பெற, 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் இருக்கும் பிரகதி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி அலைவரிசையை, தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) 6-வது பதிப்பையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஐ.எம்.சி. 2022 “புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்” என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
5ஜி அலைவரிசையை பொறுத்தவரையில் அலைவரிசை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டன. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. ஏர்டெல் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.