இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிவேக இணையத்திற்கான 5G அலைக்கற்றை ஏலத்திற்குப் பிறகு, நாட்டில் உள்ள சாமானியர்களுக்கு 5G எப்போது கிடைக்கும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் கலந்து கொண்ட இந்த ஏலத்தில் 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு அலைக்கற்றைகள் ஏலம் விடப்பட்டுள்ளது..
இந்நிலையில் இந்தியாவின் 5G சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதால் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை இம்மாத இறுதிக்குள் 5G சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளன.. இந்த குறிப்பிடத்தக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இப்போது தங்கள் 5G சேவைகளில் வேலை செய்து வருகின்றன. செப்டம்பர் 29-ம் தேதி 5G சேவையை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது..
எனினும் முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 13 இடங்களில் மட்டுமே அதிவேக 5G இணையச் சேவைகள் கிடைக்கும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த நகரங்களின் சில பகுதிகளில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G அணுகலை வழங்க வாய்ப்புள்ளது.
முதலில் 5G சேவைகளைப் பெறக்கூடிய நகரங்களின் பட்டியல்:
- புது தில்லி
- பெங்களூரு
- குருகிராம்
- மும்பை
- புனே
- சண்டிகர்
- அகமதாபாத்
- சென்னை
- கொல்கத்தா
- லக்னோ
- ஹைதராபாத்
- காந்திநகர்
- ஜாம்நகர்
இதனிடையே மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அலைக்கற்றை ஒதுக்கீடு கடிதங்கள் வெளியானதைத் தொடர்ந்து, 5G வெளியீட்டிற்குத் தயாராகுமாறு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களை இன்று வலியுறுத்தினார். சமீபத்தில் 5G ஏலத்தில் வென்ற பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, அதானி டேட்டா நெட்வொர்க்குகள் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை சுமார் ரூ.17,876 கோடியை தகவல் தொழில்நுட்பத் துறைக்கு செலுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..