fbpx

தினமும் 6 மணிநேரம்..!! இன்று முதல் ஸ்வீடனில் ’செக்ஸ்’ போட்டி..? விளக்கம் கொடுத்த அரசு..!!

ஐரோப்பிய நாடான ஸ்வீடன், பாலியல் உறவை விளையாட்டாக (Sex Championship) அங்கீகரித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுபற்றி ஸ்வீடன் அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஆங்கில நாளிதழ் ஒன்று இதுபோன்ற போட்டி ஸ்வீடனில் நடைபெறவுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. இந்த போட்டி தொடர்பான மற்ற தகவல்களில், ”உலகில் முதன்முறையாக ஸ்வீடன் நாடு செக்ஸ் போட்டியை நடத்த அங்கீகரித்துள்ளது. ஜூன் 8ஆம் தேதி இந்த போட்டி ஆரம்பம் ஆகி தொடர்ந்து 6 வாரங்களுக்கு நடைபெறும். ஸ்வீடன் செக்ஸ் ஃபெடரேஷனின் வழிகாட்டுதலின்படி இந்த போட்டி நடத்தப்படும். செடக்ஷன், ஓரல் செக்ஸ், பெனட்ரேஷன், எண்டூரன்ஸ், பாடி மசாஜ், ஃபோர் ப்ளே உள்ளிட்ட 16 அம்சங்கள் இதில் இடம்பெற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் 6 மணி நேரம் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு போட்டியும் 45 – 60 நிமிடங்கள் வரை நீடிக்கும். 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்பார்கள். வெற்றியாளர்களை 3 பேர் கொண்ட குழு தேர்வு செய்யும். பார்வையாளர்களும் வெற்றியாளர்களை தீர்மானிப்பார்கள். காமசூத்ரா போன்ற புராதன கலைகளை பயன்படுத்தும் ஜோடிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். செக்ஸ் சாம்பியன்ஷிப்பானது மற்ற விளையாட்டுக்களை போன்ற ஒன்றாகும். இதில் வெற்றி பெற பாலியல் கலையில் பயிற்சிகள் அவசியம்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த போட்டி நடப்பது உண்மையா என்பது பற்றி தற்போது விவரங்கள் வெளிவந்துள்ளன. ஸ்வீடனில் விளையாட்டு போட்டிகளுக்கு ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பு அனுமதி வழங்கி வருகிறது. நாட்டின் விளையாட்டு மேம்பாட்டிற்கு இந்த அமைப்பு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. செக்ஸ் போட்டி நடத்தவுள்ளதாக கூறப்படும் ஸ்வீடன் செக்ஸ் ஃபெடரேஷன் அமைப்பு, செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்துவதற்காக ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பை கடந்த ஏப்ரல் மாதம் அணுகியுள்ளது.

அப்போது விதி மீறல்கள் இருப்பதாக கூறி, கோரிக்கையை விளையாட்டு கூட்டமைப்பு நிராகரித்தது. மேலும், செக்ஸ் ஃபெடரேஷன் தங்கள் அமைப்பில் உறுப்பினர் இல்லை என்றும் ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருந்த செக்ஸ் சாம்பியன்ஷிப் குறித்த தகவல்கள் ஆதாரமற்றவை என்பது தெரியவந்துள்ளது.

Chella

Next Post

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! விண்ணப்பிக்க ஜுன் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

Thu Jun 8 , 2023
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் PTMC – GDMO பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் MBBS தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது விண்ணப்பதாரர்களுக்கு 64 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு அனுபவம் இருக்க […]

You May Like