fbpx

தேனி அருகே அச்சாணியால் குத்தி கொலை…..! செய்யப்பட்ட இளைஞர் 9 பேர் கைது 3 பேருக்கு வலைவீச்சு…..!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சி அரண்மனை தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்( 28) பல குற்றவாளர்களின் தொடர்புடைய இவரை கடந்த 24ம் தேதி ஒரு மர்மகும்பல் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி கொலை செய்திருக்கிறது. இதுகுறித்து அவருடைய தந்தை மணிகண்டன் வழங்கிய புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சதீஷ்குமார் சென்ற சில மாதங்களுக்கு முன்னர் அவர் வசிக்கும் பகுதியிலேயே இருக்கின்ற ஒரு சில இளைஞர்களிடம் பொது இடத்தில் வைத்து தகாத வார்த்தைகளில் திட்டி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அந்த 3 வகையான காரணமாக 9 பேர் கொண்ட கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

அத்துடன் விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், பிரவீன், தீபக், புகழேந்தி, சிலை, ராஜா, சூர்யா உள்ளிட்ட இளைஞர்களை கைது செய்தனர். மேலும் இந்த கொலை குற்றத்திற்கு உறுதுணை புரிந்த சிலரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை 9 பேர் கொண்ட கும்பல் அச்சாணியால் குத்தி கொலை செய்வது சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

அடுத்தடுத்து உயிரிழக்கும் சிவிங்கி புலிகள்...! 10 பேர் கொண்ட குழு அமைத்த மத்திய அரசு...!

Sat May 27 , 2023
சிவிங்கிப் புலித் திட்டத்திற்கு வழிநடத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்குப் பின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்தக் குழுவை அமைத்துள்ளது. சிவிங்கிப் புலிகள் அறிமுகம், கண்காணிப்பு, திட்டத்தில் முன்னேற்றம் போன்றவை தொடர்பாக இந்தக் குழு மத்திய பிரதேச வனத்துறைக்கும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கும் ஆலோசனைகளை வழங்கும். டெல்லியில் உலக புலிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோபால் தலைமையிலான இந்தக் குழுவில் இத்துறை […]

You May Like