தெலுங்கானாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 3 பேர், கார் சுவர் மீது மோதியதில் சாலை விபத்தில் உயிரிழந்தனர். காரில் இருந்த மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வரும் நிலையில், உடனடி முன்பதிவு மையங்களிலும் ஏராளமானோர் பதிவு செய்து சாமி தரிசனம் செய்கின்றனர். […]

தொடர் கனமழை காரணமாக தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 4 மாவட்டங்களிலும் இன்று காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. […]

தேனி அருகே திருமணத்தை தாண்டிய தகாத உறவால் இளம் பெண் ஒருவரும் அவருடைய ஒரு வயது குழந்தையும் கொடூரமான முறையில், வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தமபாளையம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்பவருக்கும், மதுரை பேரையூர் பகுதியில் சேர்ந்த காசிராஜன் என்பவருக்கும் சென்ற சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு கை குழந்தையும் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான், […]

தேனி அருகே மனைவி தன்னோடு வாழ மறுத்ததால், மனம் உடைந்த கணவர், மனைவி கண் முன்னே தன்னைத் தானே, கத்தியால் குத்திக் கொண்டு, உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மல்லிகிருஷ்ணன் என்பவருக்கும் ஈஸ்வரி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது இதில் மல்லிகிருஷ்ணன் மதுப்பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இதனால், அவர் குடித்துவிட்டு நாள்தோறும் வீட்டிற்கு வந்து,  […]

தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க காதலியின் குடும்பத்தார் முயற்சித்ததால், காதலியின் தந்தையை கொலை செய்ய முயற்சித்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி. அதாவது, கடந்த 2013 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே இருக்கின்ற அணைக்கரை பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை, போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷினி என்பவர் காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்தப் பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. […]

மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அவருடைய கணவர், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதே கயிற்றில், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேனி அருகே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருக்கின்ற அப்பிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகர், தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்களே ஆகும் […]

காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற தந்தையை காதலனோடு சேர்ந்து, தீர்த்துக்கட்ட முடிவு செய்த 16 வயது சிறுமி. அதாவது, தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருபவர் வேணுகோபால் பாண்டியன் (55). இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், இரு மகள்களும் இருக்கிறார்கள். இவருடைய மகளான 16 வயது சிறுமி, தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த முத்து காமாட்சி (23) என்பவரை காதலித்து வந்ததாக […]

கள்ளக்காதல் விவகாரத்தில், ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, பிரச்சனையை தடுக்கச் சென்ற கர்ப்பிணி பெண்ணின் கணவர், கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே இருக்கின்ற, டொம்புச்சேரி கிழக்குத்தெருவில், அண்ணன், தம்பிகளான மருதமுத்து மற்றும் ராஜா உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர். இதில் மருதமுத்துவின் மனைவி வீரலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன்(24) எனவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரிய […]

குடிபோதையில் நாள்தோறும் அட்டகாசம் செய்து வந்த கணவனை முகத்தில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி படுகொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பாலக்கொம்பை ராயவேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல்(37). இவருடைய மனைவி அழகு சின்னு (31) கூலி தொழிலாளர்களான இந்த தம்பதிகளுக்கு, இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து […]

அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து. நீண்ட நேரம் போராடியும் ஓட்டுனரை காப்பாற்ற முடியாத சோகம். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்ரோடு என்ற பகுதியில், அந்த மாவட்டத்தின் எல்லை சோதனை சாவடி அமைந்திருக்கிறது. இந்த சோதனை சாவடியில் வாகனங்கள் நிர்வாக செல்வதற்காக போடப்பட்டு இருக்கும் தடுப்புகளை தாண்டி, சென்ற மதுரையிலிருந்து பெரியகுளம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, எதிரே திண்டுக்கல் நோக்கி வேகமாக […]