fbpx

அதிர்ச்சி!!! 63 வயது மூதாட்டி பலாத்காரம்..

ராஜபாளைம் அருகில் உள்ள அயன்கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் 63 வயதான மூதாட்டி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவர் தனது பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அயன்கொல்லங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளி அருகிலுள்ள காட்டில் வசித்து வருபவர் 55 வயதான முருகன். மூதாட்டி, முருகனை கோதுமை வாங்கித் தருவது சம்பந்தமாக பார்க்கச் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய மூதாட்டியை, முருகன் கீழே தள்ளி பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஊர்த் தரப்பில், மூதாட்டியின் காலில் முருகனை விழவைத்து, மன்னிப்பு கேட்டு பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரலாம் எனப் பேசியுள்ளனர். ஆனால் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். சொந்தமாக லோடு வேன் வைத்துள்ள முருகனின், மனைவி, சகோதரர் மற்றும் மகன் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்.

Maha

Next Post

உஷார்..!! நாம் ஊதும் பலூன்களில் இவ்வளவு ஆபத்து இருக்கா..? இனிமே அப்படி பண்ணாதீங்க..!!

Sat Oct 7 , 2023
எந்த ஒரு விசேஷ நிகழ்ச்சியாக இருந்தாலும், பிறந்தநாளாக இருந்தாலும் சரி, எந்த ஒரு விழாவாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு பார்ட்டியிலும் அலங்காரம் இன்றியமையாதது. அதில் பலூன்கள் பயன்படுத்தப்படுவதை நாம் அதிகம் பார்க்கிறோம். சில சமயங்களில் இந்த அலங்காரங்களை நாமே செய்கிறோம். அப்படிப்பட்ட சமயங்களில் இந்த பலூன்களை ஊதுவதற்கு நம் வாயைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு ஆபத்தானது என்பது தெரியுமா? ஆம், பலூன்களை கழுவாமல் அவற்றை பாக்கெட்டில் […]

You May Like