fbpx

கழுத்து மற்றும் மார்பில் வெட்டு.! 65 வயசு மூதாட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு.! கொடூர கொலை.! ஒருவர் கைது.! 3 பேருக்கு வலை.!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்று பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் 4 பேர் கொண்ட கும்பல் மூதாட்டியை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறது. மேலும் அவரது கழுத்து மற்றும் மார்பு போன்ற பகுதிகளில் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த மர்மம் கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது .

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொடூர கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை சுனில் யாதவ் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவான 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மூதாட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

பெங்களூர்: பார்ட்டியில் பயங்கரம்.! 33 வது மாடியில் இருந்து தவறி விழுந்த 27 வயது இளைஞர் பரிதாப பலி.! காவல்துறை விசாரணை.!

Sun Dec 31 , 2023
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நண்பர்களுடன் பார்ட்டி செய்த 27 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூர் பத்தரஹல்லி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் திவ்யன்சு ஷர்மா. 27 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று […]

You May Like