8 தோட்டாக்கள் படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீகணேஷ் நீண்டநாள் நண்பராகி பின் காதலில் விழுந்து அவரையே கரம்பிடித்துள்ளார்.
8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஸ்ரீ கணேஷ் அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவர் 2019-ம் ஆண்டு அதர்வாவை வைத்து குருதி ஆட்டம் திரைப்படத்தினை தொடங்கினார்.

அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகிக் கொண்டிருக்கும் நிலையில் இயக்குநர் கணேஷ் , நாடகக் கலைஞரும், நடிகையுமான சுஹாசினி என்பவரை நேற்று காலை சென்னையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாகத் திருமணம் செய்து கொண்டனர்.
