fbpx

” அடேங்கப்பா.. 80 வயதில் 7வது குழந்தைக்கு தந்தையான ஆஸ்கர் நாயகன்..” ஆச்சரியத்தில் ஹாலிவுட்.!

80 வயதில் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை, ஏழாவது மகளின் வருகை என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார் புகழ்பெற்ற பாலிவுட் நடிகர், ராபர்ட் டி நீரோ! இதைப் பற்றி சமீபத்தில் AARP என்ற இதழில் அவர் அளித்த பேட்டியில் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இரண்டு முறை ஆஸ்கர் விருதை வென்ற, ஹாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகர், ராபர்ட் டி நீரோ, தற்போது 80 வயதில் தந்தையாகியுள்ளார். அவர் தற்போது டிஃபனி ஷென் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். அவர் மூலமாக, கடந்த மே மாதம் தனது ஏழாவது குழந்தைக்கு தந்தையானார்.

அமெரிக்காவின் AARP இதழின் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான நேர்காணலில், தனது ஏழாவது பெண் குழந்தை ஜியாவை பற்றிய கருத்துக்களை கூறி சிலாகித்து போனார்.

அவர் இதனைப் பற்றி பேசுகையில், “நான் படும் கவலை அனைத்தும் அந்த குழந்தையின் முகத்தை காணும் போது மறைந்து விடுகிறது. மேலும் அந்தக் குழந்தையின் பார்வை பரிவோடும், அன்போடும் என்னை ஏற்றுக் கொள்கிறது. அந்தக் குழந்தைக்கு வயதாகும் போது, இதனை அவள் எப்படி எடுத்துக் கொள்வாள் என்பது தெரியவில்லை என்றாலும் இப்போது அனைத்தையும் அவள் கவனிக்கிறாள். 80 வயதில் தந்தையாகி இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. அவளை ரசிக்க, அவளைச் சுற்றி அதிக காலம் இருக்க விரும்புகிறேன்”, என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

அவர் சமீபத்தில் ‘கில்லர்ஸ் ஆப் தி ஃப்ளவர் மூன்’ படத்தில் துணை நடிகராக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான ஆஸ்கர் விருதை பெறுவதற்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர் நடித்த படத்திற்காக சமீபத்தில் அவருக்கு கிடைத்த பாராட்டுகளும், ஏழாவது மகள் ஜியாவின் வருகையால் கிடைத்த மகிழ்ச்சிக்கு, வயது ஒரு தடை இல்லை என்று பலரும் கூறுகிறார்கள்.

Next Post

திருச்சி: "சாவிலும் இணைபிரியாத சகோதரிகள்.." அடுத்தடுத்து பலியான 2 உயிர்கள்.!

Sun Jan 28 , 2024
திருச்சி மாவட்டம் முசிறி அருகே 2 சகோதரிகள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. ஓட்டுனராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி சசிகலா என்ற மனைவியும் தர்ஷினி மற்றும் வேம்பு என்ற 2 பெண் குழந்தைகளும் 1 மகனும் இருந்தனர். இந்நிலையில் […]

You May Like