fbpx

சென்னையில் நாளை முதல் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

சென்னையில் 32 கடைகள், மத்திய சென்னையில் 25 கடைகள், தென் சென்னையில் 25 கடைகள் என மொத்தம் 82 நியாய விலைக் கடைகளில் நாளை (ஜூலை 4) முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தக்காளி விலை ரூ.140-ஐ எட்டியுள்ள நிலையில், பண்ணை பசுமைக் கடைகளுடன், தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது தொடர்பாக, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தக்காளி விலையை குறைப்பதற்கும், மேலும் விலை அதிகரிக்காமல் இருப்பதற்கான ஆக்கபூர்வமான பணிகளை துறையின் அலுவலர்களுடன் கலந்துபேசி, உரிய நடவடிக்கைகளை முதல்வரின் ஆலோசனையைப் பெற்று செயல்படுத்தி வருகிறோம்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய 62 பண்ணை பசுமை கடைகளில் வழக்கத்தைவிட கூடுதலாக கொள்முதலை அதிகரித்து மக்களுக்கு தக்காளியை விற்பது என முடிவெடுத்து செயல்படுத்தினோம். பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்குத்தான் பொதுமக்களுக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வியாபாரிகள் சற்று கூடுதலான விலைக்குத்தான் தக்காளியை விற்பனை செய்து வருகின்றனர். எனவே, விலையேற்றத்தைக் குறைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது” என்று கூறினார்.

இதுமட்டுமின்றி, ஏற்கெனவே சென்னையில் 27 பண்ணை பசுமை கடைகள் உள்ளன.அதிலும் இந்த விற்பனை தொடரும். நகரும் பசுமை பண்ணை வாகனங்கள் 2 என, ஆக மொத்தம் சென்னையில் நாளை முதல் 111 கடைகளில் இந்த தக்காளி விற்பனை செய்யப்படும். 50 முதல் 100 கிலோ வரை தேவைக்கேற்ப விற்பனை செய்யப்படும்.

பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படும் அதே விலைக்கே நியாய விலைக் கடைகளிலும் தக்காளி விற்கப்படும். சென்னையில் தொடங்கப்படும் இந்த விற்பனை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த 111 கடைகளின் விற்பனையைப் பொருத்து, அனைத்து மாவட்டங்களிலும் எல்லா கடைகளிலும் இல்லாவிட்டாலும்கூட, ஒரு குறிப்பிட்ட சதவீதத்திலான நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

Maha

Next Post

’தூக்கம் கெடுகிறது’..!! ட்ராலி பேக்குகளுக்கு தடை விதித்த நாடு..!! மீறினால் அபராதம்..!! எங்கு தெரியுமா..?

Mon Jul 3 , 2023
மக்கள் தினமும் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். தினம் தினம் ரயில்கள், விமானங்கள், பேருந்துகள் எல்லாம் நிரம்பிக்கொண்டு தான் இருக்கின்றன. மக்கள் பயணத்தின் போது லக்கேஜ்களுக்கு வெவ்வேறு பைகள் பயன்படுத்தப்படுகின்றன. பைகள் அதிக எடை உள்ளதாக இருந்தால் கையில் எடுத்துச் செல்வது சிரமமாக இருக்கும். அதற்கு பதிலாக இப்போதெல்லாம் அதிக எடை உள்ள பொருட்களை சிரமம் இல்லாமல் நகர்த்திச் செல்ல சக்கர பைகள்/பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கனமான பொருட்களை எடுத்துச் செல்வதில் எந்தப் […]
’தூக்கம் கெடுகிறது’..!! ட்ராலி பேக்குகளுக்கு தடை விதித்த நாடு..!! மீறினால் அபராதம்..!! எங்கு தெரியுமா..?

You May Like