கடந்த மாதம் 7-ம் தேதி முதல் 11ம் தேதி வரை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
பதிவு எண் மறும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.