fbpx

புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டங்கள் மூலமாக ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. அதில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 1896 இடங்களும், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் …

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்துவதற்காக ‘லெவல் அப்’ எனும் புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அடிப்படை திறன்கனை …

தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு திறமை தொடர் பட்டறை கோவையில் நடைபெற உள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் திறனைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 2023-2024 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேல்நிலை முதலாமாண்டு தேர்வு …

கல்வி நிலையங்களில் மூட நம்பிக்கையை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், பல்கலைக்கழகங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் கலைக் கல்லூரிகள் கூட்டமைப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் சார்பில் நடைபெற்ற “மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு” விழா …

இஸ்கான் சார்பில் இன்று முதல் சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாம் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து இஸ்கான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சென்னை இஸ்கான் சார்பில் பகவான் ஜெகன்நாதர் மற்றும் பொறுமையின் சிறப்புகள் குறித்த கோடைகால சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 6 முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்கள் …

இஸ்கான் சார்பில் நாளை முதல் சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாம் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து இஸ்கான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சென்னை இஸ்கான் சார்பில் பகவான் ஜெகன்நாதர் மற்றும் பொறுமையின் சிறப்புகள் குறித்த கோடைகால சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 6 முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்கள் …

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு பயிலும் 13 லட்சம் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் திறன் என்னும் முனைப்பு இயக்கம் ரூ.19 கோடியில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சட்ட மன்றத்தில் நேற்று நடைபெற்ற மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் அன்பில் …

சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறது. தற்போது, இந்த பள்ளியில் 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு முன் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்த நிலையில், தற்போது பள்ளியில் நடைபெறும் …

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம்.

குழந்தைகளுக்கான …

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதற்கான என்எம்எம்எஸ் தேர்வுக்குரிய முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தேர்வெழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான 2024-25ம் ஆண்டிற்கான …