fbpx

Breaking: கார் பேருந்து மோதி கோர விபத்து…! ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழப்பு…!

குஜராத்தின் நவ்சாரியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர். நவ்சாரியில் அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நடந்துள்ளது.

நவ்சாரியில் அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் பேருந்தும் காரும் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பலத்த காயம் அடைந்த ஒருவர் சூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, குஜராத் மாநிலம் நவ்சாரியின் டிஎஸ்பி விஎன் படேல் கூறியுள்ளார்.

பிடிஐ செய்தியின்படி, பேருந்தில் பயணம் செய்த ஒன்பது பேரில் எட்டு பேரும் சொகுசு பேருந்தின் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்று நவ்சாரி காவல்துறை கண்காணிப்பாளர் ருஷிகேஷ் உபாத்யாய் கூறியுள்ளார். பேருந்தில் பயணித்தவர்கள் அங்கலேஷ்வரில் வசிப்பவர்கள் என்றும், வல்சாத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த பொழுது இந்த சம்பவம் நடந்ததாக கூறியுள்ளார்.

Vignesh

Next Post

விவசாயிகளுக்கு தலா ரூ.10,000..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!! எதற்காக தெரியுமா..?

Sat Dec 31 , 2022
28 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ’மாண்டஸ்’ புயல் உருவாகி வரலாறு காணாத மழையால் கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் பெருமளவு வெள்ளம் சூழ்ந்தது. இதனால், நெல் பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி நாசமானது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினர். மேற்கொண்டு […]
மேயருக்கு மாதந்தோறும் ரூ.30,000..!! கவுன்சிலர்களுக்கு எவ்வளவு..? அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்..!!

You May Like