fbpx

44 வயது பெண் சுற்றுலாப் பயணிக்கு மது ஊற்றிக் கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்த உள்ளூர் வாசிகள்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் உள்ளூர் வாசிகள் இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் திங்கட்கிழமை காலை அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயதான பெண் சுற்றுலாப் பயணி, கொல்லம் வள்ளிக்காவு அருகே கடற்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்துள்ளார். அவர், உள்ளூர் வாசிகள் இருவருடன் நட்பாக இருந்துள்ளார். அவர்களின் நட்பைப் பெற்ற பிறகு, அவர்கள் அந்த பெண்ணுக்கு சிகரெட்டை கொடுத்துள்ளனர். ஆனால், அதை வாங்க அவர் மறுத்துவிட்டார். பின்னர், அவருக்கு மது கொடுத்துள்ளனர். அதை வாங்கி குடித்த பின் அந்த பெண் போதையாகியுள்ளார்.

பின்னர், அந்த இருவரும் அந்த பெண்ணை தங்களது பைக்கில் ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரை இருவரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் சுயநினைவு திரும்பியதும் அங்கிருந்த ஒரு ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கிருப்பவர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக கருநாகப்பள்ளி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த உள்ளூர் வாசிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Chella

Next Post

கண்டெய்னர் லாரியில் 29 சடலங்கள்..!! எய்ம்ஸ் மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!! யார் இவர்கள்..?

Wed Aug 2 , 2023
ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களில் இன்னும் அடையாளம் காணப்படாமல் 29 உடல்கள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா – சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக செயல்பட்டு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களை இணைக்கும் விதமாக செயல்படுகிறது. இந்த ரயில் கடந்த ஜூன் 2ஆம் தேதி வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. […]

You May Like