சேலத்தில் சொத்தை பல் பிடுங்குவவதற்காக மருத்துவமனைக்கு சென்று திரும்பி சடலமாக வீடு திரும்பிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் நகரைச் சார்ந்தவர் ஆனந்தபாபு வயது 32. இவருக்கு கீர்த்தனா என்ற மகள் இருந்தார் அவரது வயது ஏழு. அங்குள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார் கீர்த்தனா. அதிகமாக இனிப்பு சாப்பிடும் பழக்கம் கொண்டவரான கீர்த்தனாவிற்கு பாயில் சொத்தை பல் இருந்துள்ளது. அதனை அகற்றும் படி மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு பள்ளியில் தொந்தரவு ஏற்படவே கடந்த மார்ச் 23ஆம் தேதி சேலத்தில் உள்ள தனியார் பல் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.
அங்கே இவரது பல்லை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கீர்த்தனாவிற்கே சொத்தைப்பால் அகற்றப்பட்டது. அதன்பிறகு இரத்தப்போக்கு அதிக அளவில் இருந்ததால் கீர்த்தனாவின் உடல்நிலை மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து அவரை தீவிர சிகிச்சைக்காக வேறொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு சென்று அவரது உடல் நலத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி கீர்த்தனா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயரிழந்தார். இது தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.