fbpx

சூப்பர் ஸ்டார் கையில் இருக்கும் இந்த குழந்தை… இப்போது கோலிவுட்டின் ராக்ஸ்டார்..!! யாருனு தெரியுதா?

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே வெரைட்டியான இசையை கொடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார். முக்கியமாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ட்ரெண்டானது. அதனைத்தொடர்ந்து, அவர் இசையமைத்த அத்தனை படங்களின் பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. 90களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்தபோது எந்த மாதிரியான அதிர்வை தமிழ் சினிமா கண்டதோ அதேபோல் அனிருத் வருகையின்போதும் இருந்ததாக பலர் வியந்தபடி சொன்னது குறிப்பிடத்தக்கது.

பிசியான இசையமைப்பாளராக உள்ள இவர் ஏராளமான சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். அதன்படி சிம்பு உடன் இணைந்து அனிருத் உருவாக்கி பீப் சாங் பாடல் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அப்பாடலுக்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின. இதுதவிர நடிகை ஆண்ட்ரியா உடன் காதல் சர்ச்சையிலும் சிக்கினார் அனிருத். அவர்கள் இருவரும் லிப்கிஸ் அடித்த புகைப்படங்களும் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் ஆண்ட்ரியாவை பிரேக் அப் செய்து பிரிந்தார் அனிருத். அனிருத்தை விட ஆண்ட்ரியா 5 வயது மூத்தவர். இந்த வயது வித்தியாசம் காரணமாக தாங்கள் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டதாக அனிருத்தே பேட்டியில் கூறி இருக்கிறார். 

இப்படி பல்வேறு சர்ச்சைகளையும் கடந்து இன்று டாப் இசையமைப்பாளராக கோலோச்சி வரும் அனிருத், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உறவினர் என்பது அனைவரும் அறிந்தது. அவர் குழந்தையாக இருக்கும் போது ரஜினிகாந்த், அனிருத்தை கையில் தூக்கி வைத்திருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த போட்டோவில் அனிருத் செம்ம க்யூட்டாகவும் இருக்கிறார்.

Read more ; கொரோனா காலகட்டத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி..!! சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!

English Summary

A beautiful picture of Rajinikanth holding Anirudh in his arms is going viral on the internet.

Next Post

குடியுரிமைச் சட்டத்தின் 6A பிரிவு செல்லுபடியாகும்..!! - உச்சநீதிமன்றம் உறுதி

Thu Oct 17 , 2024
Supreme Court Upholds Constitutional Validity Of Section 6A Of Citizenship Act In 4:1 Verdict

You May Like