fbpx

அதிசயம்… இரண்டு கன்றுகளை பிரசவித்த பசு மாடு…! ஆச்சரியமாக பார்க்கும் பொதுமக்கள்.‌..!

கரூரில் பசு மாடு ஒன்று இரண்டு கன்றுகளை பிரசவித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிக அரிதான நிகழ்வாக, ஒரே பிரசவத்தில் பசு மாடு இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. கரூர் மாவட்டம், வீரசிங்கம்பட்டி பகுதியை , சேர்ந்தவர் காளிதாஸ்; விவசாயியான இவர், தனது வீட்டில் பசு மாடு வளர்க்கிறார். சினையாக இருந்த மாடு கன்று ஈன்றது. நேற்று முன்தினம் இரண்டு கன்றுகளை பிரசவித்தது. இதில், இரண்டு காளை கன்றுகளை ஈன்றதாக சொல்லப்படுகிறது. இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.

பொதுவாக பசு மாடு சினையுற்றால், ஒரு கன்று மட்டும் ஈனும். இதுபோல், இரண்டு கன்றுகள் பிரசவிப்பது அரிதானது. பசுவையும், அது ஈன்ற இரண்டு கன்றுகளையும், பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

Vignesh

Next Post

இன்றே கடைசி நாள்: பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் ரூ. 50,000.., உடனே விண்ணப்பியுங்கள்..

Wed Oct 25 , 2023
சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ முதலமைச்சரின்‌ பெண்‌ குழந்தை பாதுகாப்பு திட்டத்தில்‌ பயன்பெற ஒரு பெண்‌ குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தையுடன்‌ கணவனோ, அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்‌. இரண்டாவது பெண்‌ குழந்தை பிறந்து 3 வயது பூர்த்தியடையும்‌ முன்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. முதலில் பெண் குழந்தை அடுத்த பிரசவத்தில் ஒரே நேரத்தில் இரு பெண் குழந்தைகள் பிறந்திருந்தாலும்‌ […]

You May Like