fbpx

கரையை கடந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!! அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை..!!

வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஒடிசா அருகே இன்று கரையை கடந்தது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடலில் ஒடிசா அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும், வடக்கு திசையில் நகா்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடைப்பட்ட கடற்கரை பகுதிகளில் இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஒடிசா கடற்கரை அருகே கரையை கடந்தது. காலை 10.30 மணியில் இருந்து 11.30 மணியளவில் ஒடிசா கடற்கரை பூரி அருகே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூரி, ஜெகத்சிங்பூர், குர்டா, கட்டாக், தேன்கனல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read More : விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீர் மாயம்..!! வாஷிங் மெஷினில் சடலமாக மீட்பு..!! நடந்தது என்ன..? நெல்லையில் அதிர்ச்சி..!!

English Summary

A deep depression over Northwest Bay of Bengal has crossed the coast near Odisha today.

Chella

Next Post

உஷார்.. ஆப்பிரிக்க நாட்டிலிருந்து இந்தியா வந்த நபருக்கு Mpox வைரஸ்..!! - சுகாதார அமைச்சகம் உறுதி

Mon Sep 9 , 2024
Health Ministry confirms first case of monkeypox, mpox in India

You May Like