இளம் பெண்களிடம் நட்பாக பழகி அவர்களின் புகைப்படங்களை பெற்றுக் கொண்டு அவற்றை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அதனை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்த இரண்டு சகோதரர்களை ஈரோடு போலீசார் கைது செய்து இருக்கின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதிகளில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரத்தைச் சார்ந்த ஒருவருக்கு தமிழ் நடிகர் தர்ஷன் இடமிருந்து முகநூல் நட்பு அழைப்பு வந்திருக்கிறது. அதனை அவரும் அங்கீகரித்துள்ளார். முகப்புத்தகத்தில் நட்பாக பேச ஆரம்பித்து பின்னர் வாட்ஸ் அப்பிலும் பேசத் தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய புகைப்படங்களையும் பரிமாற்றி இருப்பதாக தெரிகிறது. பலக ஆரம்பித்த சில நாட்கள் கழித்து அவரது புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அவருக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நபர் இந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் குடும்ப உறுப்பினர்களிடமும் பகிர்ந்து விடுவதாக மிரட்டி இருக்கிறார். அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமானால் தனக்கு 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காஞ்சிபுரத்தைச் சார்ந்த அந்த பெண் உடனடியாக சைபர் கிரைம் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து விரைவாக நடவடிக்கைகளில் இறங்கிய காவல்துறையினர் அந்தப் பெண்ணிற்கு வந்த மெசேஜ் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களையும் அதற்கு பயன்படுத்தி வந்த ஐபி அட்ரஸ்களையும் கண்காணிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த நபர்கள் ஈரோடு பிபி அக்ரஹாரம் பகுதியைச் சார்ந்த சகோதரர்களான அலாவுதீன் மற்றும் வாகித் என போலீசார் அடையாளம் கண்டு கொண்டனர். இதனை அடுத்து ஈரோடு விரைந்த காஞ்சிபுரம் காவல்துறையினர் அங்கிருந்த அலாவுதீன் மற்றும் வாகித் சகோதரர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன. காஞ்சிபுரத்தைச் சார்ந்த பின் மட்டுமல்லாது மேலும் பல பெண்களிடம் இவர்கள் நட்பாக பழகி அவர்களை மிரட்டி பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்களின் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை.