fbpx

கணவனுடன் ஏற்பட்ட சண்டை.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்த இளம் பெண்…!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்து இருக்கும் இனாம் அகரம் கிராமத்தை உள்ளவர் கார்த்திகேயன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, கடந்த மூன்று வருடங்களுங்கு முன் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் செங்கமேட்டை சேர்ந்த மதியழகி (23) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கார்த்திகேயனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மதியழகி மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது, மதியழகி அவரது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த நிலையில், அவரை பக்கத்திலுள்ளவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மதியழகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மதியழகியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வி.களத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், திருமணமான மூன்று வருடங்களில் மதியழகி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து வருகிறார்.

Baskar

Next Post

’என்ன நிர்வாணமா நிக்க வச்சு’.! மாடல் அழகிக்கு நகைகளை போட்டு அழகு பார்த்த பைனான்சியர்.! அதிரவைக்கும் பின்னணி.!

Wed Aug 10 , 2022
தூத்துக்குடி தொழில் அதிபரிடம் பரிசாகப் பெற்ற 550 சவரன் நகைகளையும் விற்று, ஸ்டார் ஓட்டல்களில் மது அருந்தி தீர்த்து விட்டதாக கைதான மாடல் அழகி தெரிவித்ததால் பைனான்சியர் குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது. சென்னை பூந்தமல்லியில் தங்கி குடும்பத்துடன் பைனான்ஸ் தொழில் செய்து வந்தவர் சேகர். தூத்துக்குடியை சேர்ந்த இவர், வட்டிக்கு வட்டி போட்டதால் எக்கச்சக்கமாக குட்டிபோட்ட பணத்தை வைத்து இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டதோடு, வீட்டில் இருந்த மனைவியின் நகைகளையும் திருடிச்சென்று […]
’என்ன நிர்வாணமா நிக்க வச்சு’.! மாடல் அழகிக்கு நகைகளை போட்டு அழகு பார்த்த பைனான்சியர்.! அதிரவைக்கும் பின்னணி.!

You May Like