fbpx

#திருப்பதி : பயணிகளுக்கு சமைக்கும் போது திடீரென்று இரயிலில் தீ பற்றிய சம்பவம்..!

குஜராத் மாநில பகுதியில் அகமதாபாத்தில் இருந்து சென்னையை நோக்கி செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் நேற்று முந்தைய தினத்தில் புறப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 2.30 மணியில் திருப்பதி மாவட்டத்தின் கூடூர் ரயில் நிலையத்தில் சந்திப்பு இடையே வந்த போது, ரயிலில் உள்ள சமையல் செய்கின்ற பெட்டியில் தேவையான காலை உணவு பயணிகளுக்கு தயாரிக்க ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

திடீரென அந்த பெட்டியில் தீப்பற்றி புகை பரவிய நிலையில், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கூடூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு, பெட்டியின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர். 

சரியான சமயத்தில் தீ அணைக்கப்பட்டதால், உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 1 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டு 2 மணிநேரம் தாமதமாக காலை 7 மணிக்கு சென்று சேர்ந்துள்ளது.

Baskar

Next Post

#மதுரை :இறந்த தாயை 3 நாட்கள் வீட்டிலே வைத்திருந்த அவலம்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!

Sat Nov 19 , 2022
மதுரை மாவட்ட பகுதியில் பாலகிருஷ்ணன் – மாலதி என்ற தம்பதி வசித்த வந்துள்ளார். மூத்த மகனான ஜெய்சங்கர் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். இளைய மகனா சிவ சங்கர் மூன்றாமாண்டு மருத்துவபடிப்பு பயின்று வருகின்றார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலகிருஷ்ணன் குடும்பத்தார் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதம் மாறி பகுதி நேரம் போதக ஊழியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த சூழ்நிலையில் உடல்நலக்குறைவின் காரணமாக மாலதி கடந்த 8ஆம் திகதி […]

You May Like