மருத்துவரிடம் இருந்து தொலைபேசி மூலம் அறிவுறுத்தல்களைப் பெற்ற செவிலியர்கள் சிகிச்சை அளித்த நான்கு மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.
தெலுங்க்கான மாநிலம் ஸ்ரீரங்கப்பூர் மண்டலம் நாகசானிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த புஷ்ப லதா (22) என்பவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு பெப்பேருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத நிலையிலும், செவிலியர்கள் அவரை அனுமதித்து, மருத்துவரிடம் தொலைபேசி மூலமாக கேட்டு கர்பினிக்கு சிகிச்சை வழங்கியுள்ளனர். செவிலியர்களின் நிபுணத்துவம் இல்லாததால், புஷ்ப லதாவின் கர்ப்ப பையில் வெடிப்பு ஏற்பட்டு, அவர் மரணம் அடைந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more ; Senthil Balaji | செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50-வது முறையாக நீட்டிப்பு..!!