fbpx

அடேங்கப்பா… சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம்…! தமிழக அரசு அரசாணை…

ஆதிதிராவிடர் தொழில் முனைவோருக்கு சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படும்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் 2022-2023-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக நியமனம் பெற்று, ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் தொடங்கிட, தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரின் 2022-2023-ம் ஆண்டிற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 80 ஆதிதிராவிடர் தொழில் முனைவோர்களுக்கும், 20 பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கும், மொத்தம் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் விற்பனை முகவராக சிமென்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்குவதற்கு ஏதுவாக நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உங்க அடக்க முறைக்கு எல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்.‌..! முதலமைச்சருக்கு அண்ணாமலை நேரடி பதில்...

Thu Sep 15 , 2022
திமுகவின் அடக்க முறைக்கு தமிழக பாஜக அஞ்சப் போவதில்லை என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சமிபத்தில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்துடன் சேர்த்து சிமெண்ட் சாலை போடப்பட்டது. அதன் பிறகு பல்வேறு பணிகள் நகராட்சி சார்பில் சரியாக மேற்கொள்ளப்படுவதில்லை என தொடர்ச்சியாக குற்றச்சாட்டு […]

You May Like