fbpx

இறந்த மனைவிக்காக இப்படியொரு ஆச்சரியத்தை நிகழ்த்திய கணவர்!… கிட்டார் வடிவில் காட்டை உருவாக்கி அசத்தல்!

அர்ஜென்டினாவின் கார்டோபா எனும் இடத்தில் வளமான விவசாய பகுதியில் கிட்டார் வடிவில் அமைத்துள்ளன ‘பம்பாஸ்’ என்பது 7,000 க்கும் மேற்பட்ட சைப்ரஸ் மற்றும் யூகலிப்டஸ் மரங்களால் ஆன கிட்டார் வடிவ காடு ஆகும். இந்த காடானது ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கபட்டுள்ளது. இதை வானில் இருந்து ஒருவர் பார்த்தால் ஏதோ பெரிய சைஸ் கிட்டார் போன்றே காட்சியளிக்கிறது. அப்படிப்பட்ட இந்த காடானது அமெரிக்காவில் இருக்கும் பாம்பஸ் என்ற பகுதியை சேர்ந்த விவசாயி பெட்ரோ மார்ட்டின் யுரேட்டாவுடையது. பெட்ரோ மார்ட்டின் யுரேட்டாவின் காதல் மனைவி கிரேசீலாயிரைசோஸ்.

பெட்ரோவின் இந்த கிட்டார் வடிவ காட்டுக்கு பின் ஒரு சோகமான கதையே உள்ளது. பெட்ரோவும் அவரது மனைவியும் அவர்களுடைய விவசாய நிலத்தில் வேலை செய்து சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கிரேசீலா துணிகளை நெசவு செய்து விற்று கொண்டு இருந்திருக்கிறார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருந்திருக்காங்க. ஒரு நாள் கிரேசீலா பம்பாவுக்கு ஒரு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு விவசாயின் நிலம் இவர்களை கவர்ந்திருக்கிறது. அதாவது அந்த நிலம் ஒரு பால் கறக்கும் தோற்றத்தில் உருவாக்க பட்டிருந்ததாம்.

இதை பார்த்து அசந்து போன கிரேசீலா தனது நிலத்தையும் ஏதாவது வடிவத்தில் உருவாக்க வேண்டும் என்று நினைத்து கனவுடன் வாழ்த்திருக்கிறார். கிரேசீலா எப்போதும் இசைகருவியை மிகவும் விரும்புவதால், தங்கள் பண்ணையை கிட்டார் வடிவத்தில் உருவாக்க வேண்டும் என்று நினைத்தார். இவர் இதை தன் கணவரிடம் கூறினார். ஆனால் அவர் நேரம் வரும் போது பண்ணலாம் என்று கூறி மறுத்து விட்டார். சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் அந்த நேரத்தில் கர்பமாக ஐந்தாவது குழந்தையை சுமந்து கொண்டு இருந்திருக்காங்க.

அப்படி இருக்கும் சமயத்தில் 1977 இல் ஒரு நாள் அவள் திடீரென பெருமூளை அனீரிஸத்தால் பாதிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே இறந்திருக்காங்க. அதன் பின் அவரது கணவர் பருத்தித்துறையின் மூலமாக தனது மறைந்த மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார். அதாவது கிரேசீலா இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எப்போதும் கனவு கண்ட கிட்டார் வடிவ காட்டை உருவாக்க முடிவு செய்தார். அதன்பின்னர் கிட்டார் வடிவ காட்டை உருவாக்க எட்டு வடிவ அவ்ட் லைன் மற்றும் ஸ்டார் வடிவ துளை ஆகியவைகளில் சைப்ரஸ் மரங்களை நட்டு கிட்டாரின் கம்பிகள் இருக்கும் இடத்தில் அழகான நீல யூகலிப்டஸ் மரங்கள் நட்டு வைத்திருகிறார்.

இந்த காட்டை அவரது குழந்தைகளின் உதவியுடன், சுமார் 7,000 மரங்களை கொண்டு உருவாக்கி இருகிறார். அதிக முயற்சிகள் செய்து கிட்டார் வடிவத்தை திரு. பெட்ரோ கொண்டு வந்திருகிறார். இன்னும் இந்த காட்டை பெட்ரோ தான் பராமரித்து வருகிறார். இந்த காட்டை வானில் இருந்து பார்கும் அனைவருக்கும் நல்ல ஒரு மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதிலும் ஒரு சோகமான கதை என்னவென்றால் திரு. பெட்ரோ இது வரை தனது காட்டை விமானத்திலிருந்து பார்த்தது இல்லையாம். புகைப்படங்களை மட்டுமே பார்த்து இருக்கிறாராம். ஏனென்றால் சிறு வயதிலிருந்தே அவருக்கு விமானத்தில் பயணம் செய்வதற்கு பயமாம்.

Kokila

Next Post

தீபாவளி போனஸ்..!! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு..!!

Thu Sep 28 , 2023
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக அகலவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் பண வீக்கம் தற்போது கணிசமாக […]

You May Like