கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் குரு பிரசாத் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால், நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. மேலும், குரு பிரசாத்திற்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. ஆனால், தனக்கு நடந்த திருமணத்தை மறைத்து குரு பிரசாத், பவித்ராவை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், குரு பிரசாத்திற்குத் திருமணம் நடந்த விவகாரம் பவித்ராவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. காதலன் தன்னை ஏமாற்றியதால் மன வேதனை அடைந்த பவித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக பவித்ராவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, காதலி பவித்ரா தற்கொலை செய்து கொண்டதை அறிந்த குரு பிரசாத், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.