fbpx

புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும்..! முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு..!

புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடி ஏற்றினார். பின்னர், சுதந்திர தினவிழாவில் பேசிய அவர், ”புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார். மேலும், வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.7.10 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், காமராஜர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்படிப்புக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.19.40 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும்..! முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு..!

மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மாதாந்திர நிதியுதவியாக ரூ.500 உயரத்தி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், புதுச்சேரி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழகத்திலிருந்து 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ரூ.425 கோடி மத்திய அரசிடம் கோரியுள்ளதாக தெரிவித்தார். மேலும், காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்ட மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது என்றும் முதல்வர் ரங்கசாமி கூறினார்.

Chella

Next Post

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!

Mon Aug 15 , 2022
மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பின் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், “எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஒய்வூதியத்தொகை இன்று முதல் 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். […]
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!

You May Like