fbpx

ரஷ்யாவில் உள்ள பள்ளியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு… 6 பேர் பலி.. 20 பேர் காயம்..

ரஷ்யாவில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துடன், 20 பேர் காயமடைந்ததாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உட்முர்டியா (Udmurtia) என்ற மாகாணத்தில் தலைநகரான Izhevsk என்ற இடத்தில் இன்று துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த காவலாளி ஒருவரையும், சில குழந்தைகளையும் கொன்றதாக கூறப்பட்டனர்.. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்..

மேலும் அந்த மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. மேலும் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.. .

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்பதும், அவர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 640,000 பேர் வசிக்கும் நகரமான இஷெவ்ஸ்க், மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 960 கிலோமீட்டர் (596 மைல்) தொலைவில் மத்திய ரஷ்யாவில் யூரல் மலைகளுக்கு மேற்கே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

அதிர்ச்சி..!! ட்ரோன் கேமரா ஆர்டர் செய்த மெக்கானிக்..! விளையாட்டு காரை அனுப்பி வைத்த Flipkart..!

Mon Sep 26 , 2022
ஸ்ரீபெரும்புதூரில் பிளிப்கார்ட் மூலம் ரூ.79ஆயிரம் கொடுத்து ட்ரோன் கேமரா வாங்கியவருக்கு பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் அனுப்பியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன் (35). ஏ.சி மெக்கானிக்கான இவரது நண்பர் சுரேஷிற்கு ட்ரோன் கேமரா தேவைப்பட்டதால், ஆன்லைனில் தேடியுள்ளார். அப்போது, பிளிப்கார்ட் (Flipkart) செயலியில் 79,064 ரூபாய் மதிப்பில் ட்ரோன் கேமரா ஒன்றை பார்த்து, கிரெடிட் கார்ட் மூலம் பணம் […]
அதிர்ச்சி..!! ட்ரோன் கேமரா ஆர்டர் செய்த மெக்கானிக்..! விளையாட்டு காரை அனுப்பி வைத்த Flipkart..!

You May Like