fbpx

தமிழகத்தில் புதிய கட்சி உதயம்..!! அதிமுகவை மீட்டெடுக்கவே இந்த முடிவு..!!

“எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்” எனும் புதிய கட்சியை ஜெயலலிதாவின் மகள் என கூறிவரும் ஜெயலட்சுமி தொடங்கியுள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திடீரென பெங்களூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு செய்தி ஊடகங்கள் மூலம் வெளிவந்தார்.

ஜெயலலிதாவின் சொத்துக்கும் அரசியல் வாரிசுக்கும் தான் ஒருவரே சொந்தக்காரர் என கூறிக் கொண்ட ஜெயலட்சுமி, நேற்று டெல்லியில் திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது பேசிய ஜெயலட்சுமி, “எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற புதிய கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தன்னுடைய தாய் ஜெயலலிதாவின் பெயரைக் களங்கப்படுத்தும் நோக்கில் சிலர் ஈடுபட்டு வருவதால், கட்சி தொடங்க வேண்டிய சூழல் தனக்கு ஏற்பட்டிருப்பதாகவும், அதிமுகவை மீட்டெடுப்பதற்காகவே நான் கட்சியைத் தொடங்கியுள்ளேன் எனவும் பேசியுள்ளார். அதே நேரத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என தெரிவித்துள்ள அவர், ஜெயலலிதாவின் சொத்துக்களை மீட்பதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

Read More : அதிர்ச்சி..!! ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் மாயம்..!! ஐகோர்ட்டில் காவல்துறை பரபரப்பு தகவல்..!!

Chella

Next Post

’அதிமுக படுதோல்வி அடையும்’..!! ’இரட்டை இலையை உடனே முடக்குங்கள்’..!! தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு புதிய மனு..!!

Thu Mar 21 , 2024
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குமாறு தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் புகழேந்தி புதிய மனு அளித்துள்ளார். தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சுமார் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி. தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை தங்களுக்குத் […]

You May Like