fbpx

விரைவில்…”ஓபிஎஸ் முன்னேற்ற கழகம்” என்ற புதிய கட்சி!!! ஜெயக்குமார் அதிரடி!!!

சென்னை பெசன்ட் நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “ஓபிஎஸ் மகன் அமைச்சராவதை தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதிமுக கட்சி தொண்டர்களை குழப்ப வேண்டும் என ஓபிஎஸ் பேசியுள்ளார். நாங்கள் தான் அதிமுக கட்சி; நாங்கள் எதற்காக தனிக்கட்சி துவங்க வேண்டும். ஓபிஎஸ் வேண்டும் என்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை துவங்கலாம். நாம் ஒருவர் நமக்கு நால்வர் என ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார், இதுவும் காணாமல் போகும்.

’தொண்டர்களையும், மக்களையும் ஓபிஎஸ் குழப்புகிறார்’..!! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வத்தை தனிப்பட்ட முறையில் யாரும் நீக்கவில்லை, பொதுக்குழுதான் நீக்கியது. ஓ.பன்னீர்செல்வம் நடத்தியது கட்சி கூட்டமே இல்லை. பண்ரூட்டி ராமச்சந்திரன் பண்பாக பேசக்கூடியவர். அவர் ஏன் ஒருமையில் பேசினார் என தெரியவில்லை. திமுகவின் ‘பி’ டீமாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். 1989 -1996- ஆண்டுகளில் ஓ.பி.எஸ். யார் என்று கட்சிக்கு தெரியாது. 2001-ம் ஆண்டுதான் கட்சியில் அவர் யார் என்று தெரிய வந்தது. அதற்கு முன்பு தேனி நகரத்தில் மட்டும்தான் அவரை தெரியும். நான் 1991-ம் ஆண்டே அமைச்சராகி விட்டேன் என்று கூறினார்

மேலும், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சிக்கொடியை பயன்படுத்துவது தவறு. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. இயங்கி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் அவரது தலைமையிலான கூட்டணிதான் அமையும். அவரது தலைமையை ஏற்றுத்தான் எல்லோரும் வருவார்கள்” என்று கூறினார். இன்று தான், அதிமுக கொடி மற்றும் பெயர் ஆகியவற்றை பயன்படுத்து தொடர்பாக விளக்கம் கேட்டு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

திடீரென மயங்கிய டாக்டர்..!! பக்கத்தில் விஷ ஊசி..!! ஓடிவந்த மனைவி..!! கடைசியில் நேர்ந்த பரிதாபம்..!!

Thu Dec 22 , 2022
புதுச்சேரியில், பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்த டாக்டர் தனக்கு தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் எல்லைப்பிள்ளை சாவடி தந்தை பெரியார் நகர் 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் விஜய் ஆனந்த். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2016 முதல் சவுதி அரேபியாவில் விஜய் ஆனந்த் டாக்டராக பணிபுரிந்து வந்தார். […]
திடீரென மயங்கிய டாக்டர்..!! பக்கத்தில் விஷ ஊசி..!! ஓடிவந்த மனைவி..!! கடைசியில் நேர்ந்த பரிதாபம்..!!

You May Like