சாலை பாதுகாப்பை அதிகரிப்பதற்காக மத்திய அரசு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது தேசிய தர கட்டுபாட்டு ஆணையத்தின் 5 நட்சத்திர குறியீடு பெறவேண்டும் என்றால், கார்களில் 6 ஏர்பேக்குகள் பொருத்தபடவேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இது கார் வாங்குவோர் மத்தியில் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வாகன உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA) நடத்திய 63-வது ஆண்டு மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்தாண்டு செப்டம்பரில், கட்டாய 6-ஏர்பேக் விதி 2023 அக்டோபர் முதல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். வாகனத் துறையால் எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோக சங்கிலி தடைகள், பெரிய பொருளாதார இழப்புகளின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, பயணிகள் கார்களில் (M-1 வகை) அக்டோபர் 1 முதல் குறைந்தப்பட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்ததாக நிதின் கட்கரி கூறினார்.
இந்நிலையில், தேசிய தர கட்டுபாட்டு ஆணையத்தின் 5 நட்சத்திர குறியீடு பெற இந்திய தயாரிப்பு கார்கள் 6 ஏர்பேக்குகளை கொண்டு இயங்க வேண்டியது கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களின் நம்பிக்கை ஏற்படுத்தினாலும், கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கூடுதல் செலவை அளிக்கிறது. இதனால், கார்களின் விலையும் கணிசமாக உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.