fbpx

கத்திப்பாரா அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் உயிரிழப்பு..! அரசுப் பேருந்து பலத்த சேதம்..!

கத்திப்பாரா மேம்பாலம் அருகே வழிகாட்டிப் பலகை விழுந்து இருவர் காயமடைந்த நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே சாலையில் பயணிப்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் மிகப்பெரிய வழிகாட்டிப் பலகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த வழிகாட்டிப்பலகை இரு புறமுமிருந்த கம்பங்களோடு திடீரென பெயர்ந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கத்திப்பாரா அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் உயிரிழப்பு..! அரசுப் பேருந்து பலத்த சேதம்..!

மேலும், இந்த வழிகாட்டுப்பலகை விழுந்த விபத்தில் ஒரு அரசுப்பேருந்து பலத்த சேதம் அடைந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் குறைந்தளவு போக்குவரத்தே இருந்ததால் பெரும் விபரீதங்கள் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கத்திப்பாரா அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் உயிரிழப்பு..! அரசுப் பேருந்து பலத்த சேதம்..!

Chella

Next Post

எரிந்த நிலையில் பெண்ணின் உடல் சென்னை புதிய மேம்பாலம் அருகே பரபரப்பு...!

Sun Aug 7 , 2022
சென்னை திருவொற்றியூர் பூங்காவனபுரம் 1வது தெருவில் குடியிருப்பவர் மணிமாறன்(35). இவர் தேனாம்பேட்டையில் இருக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வேலை செய்து வருகிறார். வாரத்திற்கு ஒரு நாள் வீட்டிற்கு வந்து செல்வார் என்று தெரிகிறது. இவரது மனைவி மைதிலி (34) இவர் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த மூன்றாம் தேதி எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் இருக்கும் […]

You May Like