ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த பயணிகளுடன், சிறப்பு ரயில் காலை 4.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது.
ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் விபத்தில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த பயணிகளுடன், சிறப்பு ரயில் காலை 4.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் லேசான காயமடைந்த நபர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.