fbpx

’அன்னைக்கு ஒரு பேச்சு.. இன்னைக்கு ஒரு பேச்சா’..? ’விடியா முதல்வரே’..!! மு.க.ஸ்டாலினை விளாசிய எடப்பாடி பழனிசாமி..!!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த நீங்கள், கடந்த 2021இல் சட்டமன்ற தேர்தலின்போது வெளியிட்ட 311-வது மற்றும் 181ஆம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

போராட்டத்தில், நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைது செய்துள்ளீர்கள். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருக்கிறீர்கள். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

100% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன் என்ற பொய்யை சிறு தயக்கம் கூட இல்லாமல் மக்களிடம் கூறி ஏமாற்ற முயற்சிக்கும் விடியா திமுக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

டிடிஎஃப் வாசனின் பைக் எரிக்கப்படுகிறது? யூடியூப் சேனல் முடக்கப்படுகிறது? சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

Thu Oct 5 , 2023
சாலைகளில் பைக்கில் சாகசம் புரிந்து வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றிருப்பவர் டிடிஎப் வாசன். இவர் தனது பைக் சாகசத்தால் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். மேலும், போலீசாரும் அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கினார். பின்னர், செப்டம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் […]

You May Like