fbpx

புதுச்சேரி அமைச்சரின் தீவிர ஆதரவாளர் கொடூர கொலை..!! பெரும் பதற்றம்..!! போலீசார் குவிப்பு..!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே கணுவாபெட்டை வன்னியர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர். மேலும் மங்கலம் தொகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு பேக்கரியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் செந்தில்குமார் மீது வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில், நிலைகுலைந்து போன அவரை அந்த கும்பல் கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் படுகாயமடைந்த செந்தில்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அங்கு விரைந்த போலீசார், செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். பேக்கரியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமைச்சரின் ஆதரவாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Chella

Next Post

பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு என்ன ஆச்சு..? அவரது உடல்நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்..!!

Mon Mar 27 , 2023
புகழ்பெற்ற பின்னணி பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார். குறிப்பாக தமிழில் இவரை பேமஸ் ஆக்கியது வசீகரா பாடல் தான். இப்பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் பாம்பே ஜெயஸ்ரீயின் இனிமையான குரல் தான். தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களாக வலம் வரும் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரது இசையில் பல்வேறு சூப்பர்ஹிட் […]

You May Like