fbpx

காதலில் விழுந்த மாணவி..!! காமுகனால் கைக்குழந்தையோடு காப்பகத்தில் தவிக்கும் பரிதாபம்..!!

இன்ஸ்டாகிராமில் பொழுதை கழித்த 10ஆம் வகுப்பு மாணவி விபரீத காதலில் விழுந்ததால், காமுகனால் சீரழிக்கப்பட்டு வெளிமாநிலத்தில் கைக்குழந்தையோடு காப்பகத்தில் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பள்ளிச்செல்லும் சிறுமிக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலைச் சேர்ந்தவர் வைகுண்ட அருள். இவர், ஸ்டைலான செல்பி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அப்போது, இன்ஸ்டாகிராமில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் வைகுண்ட அருளுக்கு அறிமுகமாகி உள்ளார். அந்த மாணவியை காதல் வலையில் வீழ்த்திய அருள், இரணியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான சிறுமி, தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தி உள்ளார்.

மாணவியை விட்டுச்சென்றால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்ற அச்சத்தில் கர்ப்பிணியான மாணவியை கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற வைகுண்ட அருள், அங்கு வைத்து ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். நாட்கள் செல்லச் செல்ல தனது சுயரூபத்தை காட்டிய அருள், வரதட்சனை கேட்டு சிறுமியை துன்புறுத்தியுள்ளார். அப்பாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி கதறி அழுதுள்ளார். நியாயம் கேட்க சென்ற சிறுமியின் தந்தையையும் வைகுண்ட அருள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், கேரளாவில் உள்ள காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். திருமணமானதாக கூறப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரிக்கையில், அவர் 18 வயது நிரம்பாத சிறுமி என்பதை அறிந்த போலீசார் அவருக்கு பாலியல் பலாத்காரம் நடந்தது தமிழக பகுதி என்பதால், தமிழக டிஜிபிக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, குளச்சல் அனைத்து மகளிர் போலீசார், வைகுண்ட அருள் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். சிறுமியை கடத்தி வந்து தாக்கியதாக கேரள போலீசார் அருள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்ததால், தாயையும் சேயையும் போலீசார் அங்குள்ள காப்பகத்தில் சேர்த்தனர். தலைமறைவான வைகுண்ட அருளை இருமாநில போலீசாரும் தேடி வருகின்றனர்.

Chella

Next Post

கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க தன் மீதே ஆசிட் வீச சொன்ன கள்ளக்காதலி நடத்திய அற்புத நாடகம்….!

Wed Apr 5 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மாடத்தூர் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் லதா(46). சித்திரன்கோடு அருகே அரிசி மில் ஒன்றை நடத்தி வருகிறார் இந்த நிலையில், கடந்த 31 ஆம் தேதி லதா தன்னுடைய மில்லில் நுண்ணியூர் கோணம் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் மீது ஆசை வீசிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் படுகாயம் […]

You May Like