fbpx

திருப்பூர் அருகே கார் மீது டேங்கர் லாரி மோதி விபத்து! ஒரே குடும்பத்தைச் சார்ந்த 3 பேர் பரிதாப பலி!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சார்ந்தவர் விஸ்வநாதன். இவர் தன்னுடைய குடும்பத்துடன் சென்னிமலையில் இருக்கின்ற தன்னுடைய உறவினர் வீட்டு திருமண நிகழ்வில் பங்கேற்றுக் கொள்வதற்காக சான்ட்ரோ காரில் பயணம் செய்திருக்கிறார்.

இதற்கு நடுவே சென்னி மலையிலிருந்து காங்கேயம் நோக்கி வருகை தந்து கொண்டிருந்த டேங்கர் லாரி காங்கேயத்தை அடுத்துள்ள சிவியார்பாளையம் அருகே இன்று அதிகாலை வருகை தந்து கொண்டு இருந்த சமயத்தில், எதிர்பாராத விதத்தில் விஸ்வநாதன் ஒட்டி வந்த கார் மீது மோதி விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த விஸ்வநாதன் மற்றும் அவருடைய மாமியார் மணி உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர். அவர்களுடன் காரில் பயணம் செய்த ரமணன் மற்றும் உமாபதி உள்ளிட்டோர் பலத்த காயங்களுடன் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ரமணன் பலியானார். மேல் சிகிச்சைக்காக உமாபதி காங்கேயம் அரசு மருத்துவமனையிலிருந்து கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் காங்கேயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Kathir

Next Post

ஆசை ஆசையாக மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ஓடி வந்த தந்தை! கொலை செய்யப்பட்ட கொடூரம்!!!

Mon Dec 5 , 2022
சென்னை புளியந்தோப்பு ஏ.எம். கார்டன் பகுதியைச் சார்ந்தவர் முனுசாமி(37). இவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அல்லிக்குளம் வணிக வளாகத்தில் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென்று கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த கொலையை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். காவல்துறையினரின் மூலமாக மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து […]

You May Like