மத்திய பிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் குடித்துவிட்டு மது போதையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில் கலாட்டா செய்த சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களை எரிச்சல் ஊட்டியது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டு தற்போது காவல்துறையின் கவனிப்பில் இருக்கிறார். மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்திப்பில் இளம் பெண் ஒருவர் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலை என்றும் பாராமல் போதை தலைக்கேறிய நிலையில் கடும் அட்டகாசத்தில் ஈடுபட்டார். அப்பகுதியில் செல்கின்ற வாகனங்களை மரித்து அதன் மீது ஏறி நிற்பது. வாகனங்களுக்கு இடையூறாக சாலையை கடப்பது என கடும் அட்டகாசத்தில் ஈடுபட்டார் அந்தப் பெண்.
இது தொடர்பாக காவல்துறையினர் அந்தப் பெண்ணை சமாதானம் செய்ய முயன்றும் அவர்களால் முடியவில்லை. அப்பகுதியில் சென்ற கார்களை நிறுத்தி அவற்றின் மீது ஏறி அமர்ந்து பாட்டு பாடி வாகன ஓட்டிகளை கடுப்பாக்கினார் அந்த பெண். இவரது நடவடிக்கைகளால் அந்த சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தான் மது அருந்தியதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பற்றிய தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட போக்குவரத்தையும் சரி செய்தனர். தற்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது இது மக்களை எரிச்சலடைய செய்கின்றன.