Modi: மத்திய பிரதேசத்தில் பண்டைய இந்திய பாரம்பரிய பஞ்சாங்கத்தின் (நேர கணக்கீட்டு முறை) படி நேரத்தை காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் வேத கடிகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் 9 நாள் விக்ரமோத்சவ் இன்று தொடங்குகிறது. இந்தநிலையில் உஜ்ஜயினியின் ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள 85 அடி கோபுரத்தில் ‘விக்ரமாதித்ய வேதக் கடிகாரம்’ நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது உலகின் முதல் வேத கடிகாரம் […]

மத்திய பிரதேசத்தில், நோய்வாய்ப்பட்ட தனது நண்பனுக்காக, பத்தாம் வகுப்பு பொது தேர்வை எழுதிய 19 வயது சிறுவன் பிடிபட்டார். நான்கு பரீட்சைகளை முடித்தபின், ஐந்தாவது பரிட்சையை எழுதும் போது அவர் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது தேர்வுச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியரில் இருக்கும் சிபிஎஸ் கான்வென்ட் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றுக் […]

மத்திய பிரதேச மாநிலத்தில், பிறந்து 20 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை புதரில் தூக்கி எறிந்து சென்றுள்ளார் அந்த குழந்தையின் தந்தை. ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டு இருந்தபோது, பெண் குழந்தை பிறந்ததால் இவ்வாறு செய்ததாக அவர் காவல் துறையினரிடம் தெரிவித்தார். அந்த பச்சிளம் குழந்தையை கைப்பற்றி பெற்ற தாயிடம் ஒப்படைத்த காவல்துறையினர், அந்த தந்தையின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய பிரதேசம் […]

மத்திய பிரதேசத்தின் ஹர்த்தா நகரில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மதியம் நடைபெற்ற இந்த வெடி விபத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இந்த கோர சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை அறிவித்துள்ளார். இது […]

மத்திய பிரதேச மாநில பட்டாசு ஆலையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்து நாட்டையே அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ஹர்தர் நகரில் மிகப்பெரிய பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. சற்று முன் அந்த ஆலையில் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் மரணம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த பயங்கர விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் […]

போபால் நகரில் தனது அண்ணி புகையிலையை தர மறுத்ததால், இரவில் வீடு புகுந்து அண்ணியையும், அவரது 5 வயது மகனையும் கோடரியால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தில் ஈடுபட்ட ரம்லா கோல் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பிரதேசம் மாநிலத்தின், போபால் நகரில் உள்ள ஷாஹ்டோல் மாவட்டத்தில் சுக்கி பாய்(35) மற்றும் அவரது கணவர் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். […]

மத்திய பிரதேசத்தில் 15 வயது சிறுமியை, பெற்றோரின் கண்முன்னே துப்பாக்கி முனையில் மிரட்டி மூன்று நபர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விசாரணையை போலீசார் துவங்கியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரவு, மத்திய பிரதேசத்தின், குவாலியர் மாவட்டத்தில் உள்ள பன்வர்பூர் பகுதியில் 15 வயது சிறுமியை, மூன்று நபர்கள் அந்த சிறுமியுடைய பெற்றோரின் கண்முன்னே […]

‌ மத்திய பிரதேசம் மாநிலத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும்  சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது . மத்திய பிரதேசம் மாநிலத்தின் கோட்வள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த அணில்  உய்கே என்ற நபருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு ஆண் […]

மத்தியபிரதேச மாநிலத்தில் மனைவி வேண்டுமென்றே தாம்பத்திய உறவை தவிர்த்ததால் அவரது கணவர் தொடர்ந்த வழக்கில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டு இருக்கிறது. மேலும் தாம்பத்திய உறவை வேண்டுமென்றே தவிர்ப்பதும் வன்கொடுமை தான் என அந்த தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது.. மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதிக்கு 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவர் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய வேண்டி இருந்ததால் மனைவி அவருடனான தாம்பத்திய […]

மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்தும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தின் குணா-ஆரோன் சாலையில் தனியார் பேருந்து ஒன்று டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் பயணிகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 17 பேர் அருகில் […]