fbpx

சீனாவைச் சேர்ந்த இளம்பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்..!! கோலாகலமாக நடந்த திருமணம்..!! குவியும் வாழ்த்து..!!

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பாலசந்தர். இவர், நியூசிலாந்து நாட்டில் தொழில்முனைவராக உள்ளார். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியோவுக்கும் சமூக வலைதள செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது அவர்களிடையே காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதுபற்றி அவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டனர். அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோரும் பச்சைக்கொடி காட்டினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த காதல் ஜோடியினர் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதுவும் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொள்ள யீஜியோ விரும்பினார்.

சீனாவைச் சேர்ந்த இளம்பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்..!! கோலாகலமாக நடந்த திருமணம்..!! குவியும் வாழ்த்து..!!

இதையடுத்து அவர்களின் திருமணம் நேற்று கடலூர் முதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ் கலாசார படி மணமகன் பட்டு வேட்டி, சட்டை அணிந்தும், மணமகள் பட்டுசேலை, நகைகள் அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்திருந்தனர். பிறகு வேத மந்திரங்கள் முழங்க மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். அப்போது அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தேசம் கடந்து மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளதை பார்த்து, அவர்களது உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Chella

Next Post

தூத்துக்குடி அருகே பட்ட பகலில் ஆட்டோவில் பயணித்த பெண் படுகொலை…..! ஓட்டுநரின் பரிதாப நிலை….!

Tue Apr 11 , 2023
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (33). இவர் சொந்தமாக ஆட்டோ ஒன்றை வைத்து தொழில் செய்து வருகிறார் இவர் நேற்று அதிகாலை தன்னுடைய ஆட்டோவில் வானரமுட்டியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை ஏற்றிக்கொண்டு கட்டாரங்குளத்திற்கு சென்றுள்ளார். அந்த ஆட்டோ வானரமுட்டி கட்டாரங்குளம் இடையே காளம்பட்டி அருகில் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவை வழிமறித்த மர்ம நபர்கள் ஆட்டோவில் இருந்த […]
மயக்க நிலையில் திருமணம்..!! ஆபாச வீடியோவை காட்டி மிரட்டல்..!! தூக்கில் தொங்கிய 17 வயது சிறுமி..!!

You May Like