fbpx

சாலையில் சென்றவரை தடுத்து நிறுத்தி ரூ.500-க்கு அழைத்த வாலிபர்..!! கன்னியாகுமரியில் பரபர சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் சுண்டன்பரப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (36). இவர் சுவாமிநாதபுரம் பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவரை வாலிபர் ஒருவர் வழிமறித்து நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர், தனது வீட்டில் அழகான இளம்பெண்கள் இருப்பதாகவும், ரூ.500 கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத செந்தில்குமார், அதிர்ச்சியடைந்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குறிப்பிட்ட வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள அறை ஒன்றில் அரைகுறை ஆடையுடன் இளம்பெண் ஒருவர் இருந்தார். இதையடுத்து, அந்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக வாலிபரையும் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் ராஜேஷ் (38) என்பதும் கேரளா மாநிலத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. மேலும், இந்த விபச்சார தொழிலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த ஆண் நண்பர் அதிரடி கைது…..! பொள்ளாச்சி காவல்துறையினர் நடவடிக்கை…..!

Thu May 4 , 2023
கோவை இடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் சுஜய் (28) இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்திற்கு பிறகு பொள்ளாச்சியை அடுத்துள்ள டி கோட்டாம் பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கர்ப்பமாக இருக்கின்ற இவருடைய மனைவி பிரசவத்திற்காக கேரளாவில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இத்தகைய சூழ்நிலையில், நேற்று இடையார்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான சுப்புலட்சுமி (20) என்பவர் இருக்கின்ற தன்னுடைய ஆண் […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like