fbpx

கவனம்…! அரசு உதவித்தொகை பெற ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்…! இல்லை என்றால் சிக்கல்…!

ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ மூலம்‌ கல்வி உதவித்‌ தொகைக்கான இணையதளம்‌ கடந்த 30.01.2023 அன்று திறக்கப்பட்டு இது வரை சுமார்‌ 3 லட்சம்‌ மாணாக்கர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌. மேலும்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசின் கல்வி உதவித்தொகை..!! இன்று முதல் தொடக்கம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!!

இத்திட்ட விதிமுறைகளின்படி, 2022-2023 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌, முதன்முறையாக e-kyc முறையில்‌ ஆதார்‌ எண்‌ மற்றும்‌ அதனுடன்‌ இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை கொண்டு அதார்‌விவரங்கள்‌ சரிபார்க்கப்பட்டு, இணையத்தில்‌ பெறப்பட்ட சாதிசான்று,வருமானச்சான்று, ஆதாருடன்‌ இணைக்கப்பட்ட சேமிப்புக்‌ கணக்கு எண்‌ ஆகிய அனைத்து ஆவணங்களையும்‌ இணையவழியில்‌ சரிபார்க்கப்பட்டு,மாணாக்கர்களின்‌ ஆதாருடன்‌ இணைக்கப்பட்ட வங்கிக்‌ கணக்கிற்கு கல்வி உதவித்‌ தொகை மாணாக்கர்களுக்கு நேரடியாகசென்றடையும்‌ வகையில்‌ கல்வி உதவித்தொகை இணையதளம்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை இணையதளத்தில்‌ கல்வி உதவித்‌ தொகை பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்‌ என்பது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள காணொளி வீடியோ பார்த்து உரிய ஆவணங்களுடன்‌ கல்வி உதவித்‌தொகைக்கு தகுதியுள்ள மாணாக்கர்கள்‌ விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும்‌, கல்வி உதவித்தொகை இணையதளத்தில்‌, ஆதார்‌ எண்ணுடன்‌ இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்களே எடுத்துக்கொள்ளப்படும்‌ என்பதினால்‌, கல்வி உதவித்தொகை விடுவிப்பதற்கு முன்னர்‌ மாணாக்கர்‌ அனைவரும்‌ தங்கள்‌ வங்கி கணக்கு விவரங்களை ஆதார்‌ எண்ணுடன்‌ இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்‌.

Vignesh

Next Post

#Rain: தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு...! வானிலை மையம் கணிப்பு...!

Wed Mar 1 , 2023
தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட […]

You May Like