90களில் தமிழ் கன்னடம் தெலுங்கு என்று பல்வேறு மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஆமனி 1990 ஆம் வருடம் வெளியான புதிய காற்று திரைப்படத்தின் மூலமாக திரை பயணத்தை ஆரம்பித்தார்.
இதன்பிறகு தங்கமான தங்கச்சி, இதுதாண்டா சட்டம், முதல் சீதனம் என்று அடுத்தடுத்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து தனக்கென்று தமிழ் சினிமாவில் தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
ஒரு சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஆமனி தற்சமயம் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் சமீபத்தில் அவர் தனக்கு ஆரம்ப காலத்தில் சினிமாவில் ஏற்பட்ட பல மோசமான நிகழ்வுகள் பற்றி பகிர்ந்திருக்கிறார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது நான் சினிமா துறையில் அறிமுகம் ஆகும் போது பல துன்பங்களை சந்தித்தேன், சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி, அதன் பிறகு அதன் நகைச்சுவைக்காக தான் பேசியது என்பதை போல காட்டிக் கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.
அதோடு அவர்கள் சொல்லும் இடத்திற்கு தனியாக வரவேண்டும் என்றெல்லாம் தெரிவிப்பார்கள், எந்த தவறும் செய்யாமல் திரை துறையில் சாதிக்கலாம் என்று என்னுடைய தாய் தான் எனக்கு தைரியம் கொடுத்தார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.