புதிய வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குநரகம் முதல்வர் என் ரங்கசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
கடந்த வாரத்தில் சுமார் 400 பேர் H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் அதிகபட்ச சதவீதம் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். “ஆனால், இது ஒரு மோசமான சூழ்நிலை அல்ல. நோயாளிகள் தீவிரமாக இல்லை. அவர்களில் ஏழு பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் காய்ச்சல், உடல் வலி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளுக்கு வழக்கமான மருந்துகளுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மார்ச் 31-ம் தேதி வரை இந்த நிலை தொடரும் என்று சுகாதாரத் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால், ஆலோசனை நடத்தி, பாதுகாப்பு நடவடிக்கையாக எல்.கே.ஜி முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.