fbpx

திடீரென நடந்த மோதல்..!!  4 பாதுகாப்பு படையினர், 3 பயங்கரவாதிகள் பலி..!! பாகிஸ்தானில் பரபரப்பு!!

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த மோதலில் 4 பாதுகாப்பு படையினரும், 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக ராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது. மாகாணத்தின் பெஷாவர் மாவட்டத்தில் உள்ள ஹசன் கேல் பகுதியில் பாதுகாப்பு படையினர் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையை மேற்கொண்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

இந்த நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில், பயங்கரவாத கூட்டத்தின் தளபதி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக ஐஎஸ்பிஆர் கூறியது. கடுமையான துப்பாக்கி சண்டையின் போது நான்கு பாதுகாப்பு பணியாளர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்த பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டதாக ஐஎஸ்பிஆர் அறிக்கை தெரிவித்துள்ளது.

English Summary

According to a military statement, 4 security forces and 3 terrorists were killed in an encounter in Pakistan’s northwestern Khyber Pakhtunkhwa province.

Next Post

பன்றி சிறுநீரகம் பொறுத்தப்பட்ட இரண்டாவது நபர் 47 நாட்களுக்கு பிறகு உயிரிழப்பு..!!

Thu Jul 11 , 2024
Woman in New York receives pig kidney transplant after multiple organ failure, dies

You May Like