fbpx

கவனம்…! 30-ம் தேதிக்குள் இதை செய்யவில்லை என்றால்… உங்க அக்கவுண்டிற்கு பணம் வராது…!

சேமிப்புத் திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் இலவசமாக வழங்கப்படும் முக்கிய ஆவணமாகும். ஆதார் அட்டை பயன்படுத்தி எரிவாயு இணைப்புகளை வாங்குவது, முதலீடு செய்வது, வாக்கு செலுத்துவது, ஓய்வூதிய பெறுவது, கல்வி உதவி தொகை பெறுவது, ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, ரேஷன் கார்டில் பெயரை நீக்க, கல்லூரிகளில் சேர, வங்கிளில் கணக்கு துவங்கவும், திருமணத்தை பதியவும், சொத்துக்களை பதிவு செய்வது போன்ற பல்வேறு சேவைகளைப் பெற பயன்படுத்தப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.

அதேபோல அஞ்சல்துறையில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி உட்பட சிறு சேமிப்புத் திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி உட்பட சிறு சேமிப்புத் திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அவர்களது சேமிப்புக் கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ஆதார் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஆதாருடன் இணைப்பது நபர்களின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்படும் என தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் தங்களது அருகில் உள்ள வங்கி கிளைகளுக்கு சென்று ஆதார் உடன் இணைக்க வேண்டும்.

Vignesh

Next Post

மாதந்தோறும் அதிக வருமானம் பெற்றுத்தரும் முதலீட்டு திட்டங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Sun Sep 17 , 2023
பொருளாதார வீழ்ச்சி மாத சம்பளம் வாங்கக்கூடிய நபர்களை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படும் லேஆஃப்களில் இருந்து மீண்டு வருவதற்கும் திட்டமிட்ட முதலீடுகளை செய்வது உதவ கூடும். வழக்கமான சிறந்த ரிட்டன்களை பெறுவதற்கு மியூச்சுவல் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட்டுகள் மற்றும் வருடாந்திர திட்டங்களில் முதலீடு செய்யலாம். பல ரியல் எஸ்டேட் முதலீட்டு திட்டங்கள் மாத அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை வருமானத்தை ஈட்டி தரக்கூடியதாக உள்ளன. பெரிய […]

You May Like