fbpx

குவிந்து கிடக்கும் அந்தரங்க புகைப்படங்கள்..!! அதிர்ச்சியில் திகைத்த நீதிபதி..!! ஐகோர்ட்டை அலறவிட்ட பெண்..!! நடந்தது என்ன..?

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”எனக்கும் விவேக்ராஜ் என்பவருக்கும் திருமணமாகி சேர்ந்து வாழ்ந்து வந்தோம். எனது கணவரின் செல்போனை பார்த்த போது அதில் பல பெண்களிடம் ஆபாச வீடியோ கால் ஸ்கிரீன்ஷாட் மற்றும் அந்தரங்க உறுப்புகளின் புகைப்படங்களை வைத்திருந்தார். தனது கணவர் வங்கியில் வேலை பார்ப்பதால் அங்கு வரும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் பேசி சுமார் 500 முதல் 1,000 ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார்.

இதுபற்றி அவரது குடும்பத்தாரிடம் கூறியபோது, இதைப் பற்றி வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று என்னை மிரட்டினர். தன்னை 2 மாத கர்ப்பிணி என்று கூட பாராமல் அடித்து துன்புறுத்தியதால் கரு சிசுவிலேயே கலைந்துவிட்டது. இது தொடர்பாக தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகையால், எனது கணவர் மீது அளிக்கப்பட்ட புகார் மீது தஞ்சை மகளிர் போலீசார் உரிய விசாரணை நடத்த வாய்ப்பில்லாததால் அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும். அதோடு இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிபிசிஐடி தரப்பு காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Chella

Next Post

உங்கள் ஃபாஸ்ட் டேக்கை கேஒய்சியுடன் இணைத்துவிட்டீர்களா..? எப்படி செக் பண்ணுவது..? இன்றே கடைசி..!!

Wed Jan 31 , 2024
ஃபாஸ்ட் டேக் என்பது சுங்கச்சாவடிகளில் காத்திருந்து கட்டணத்தைச் செலுத்தாமல் அதைக் கடக்கும் போது தானாகப் பணம் செலுத்தும் ஒரு வசதியாகும். கடந்த 2021 பிப்ரவரி மாதம் முதல் இந்த பாஸ்ட் டேக் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டன. பாஸ்ட் டேக்குகள் இல்லையென்றால், சுங்கக் கட்டணம் இரட்டிப்பாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டன. ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் இந்த ஃபாஸ்ட் டேக்குகளை வாங்க முடியும். இரண்டில் எப்படி வாங்கினாலும் கேஒஸ்சி கட்டாயம் தேவை. இந்த ஃபாஸ்ட் […]

You May Like