fbpx

மகிழ்ச்சி…! விரைவில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வரப்போகும் அதிரடி மாற்றம்…!

பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கம். அதே போல தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 98.3 % பேர் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கி வருகிறார்கள். ஒரு சில மாவட்டங்களில் சோதனை முறையில் கருவிழி ஸ்கேனர் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விரைவில், தமிழகம் முழுவதும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கைரேகை பதிவு மூலம் பலருக்கு ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதில் சிக்கல் உள்ள நிலையில் கருவிழி ஸ்கேன் மூலம் பொருட்கள் வாங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள பயோமெட்ரிக் முறையால் ரேஷன் கடை ஊழியர்களும் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பலருக்கு கைரேகை பதிவாகாத காரணத்தினால் பொருட்களை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக கருவிழி ஸ்கேன் மூலம் பொருட்கள் வாங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

Vignesh

Next Post

எச்சரிக்கை!... பிரதமர் மோடி படம் இல்லாவிட்டால் நிதியுதவியை நிறுத்துவோம்!… மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அதிரடி!

Wed Oct 25 , 2023
மத்திய அரசு வழங்கும் ஒவ்வொரு திட்டத்திலும் பிரதமர் மோடியின் படம் இடம்பெறவேண்டும் என்றும் இல்லாவிட்டால் நிதியுதவி நிறுத்துவோம் என்றும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி அளித்தால், அதை ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் அரசு பயன்படுத்திக்கொண்டு, அனைத்தையும் தாங்களே செய்ததை போன்று விளம்பரம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். மத்திய அரசின் ஒத்துழைப்பு […]

You May Like