fbpx

ஊரக உள்ளாட்சித் துறைக்கு தமிழகஅரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு….! மகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள்……!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% கடைகளை ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீதம் அல்லது மொத்த கடைகள் 20க்கும் குறைவாக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு கடை ஒதுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உரிய கிராம வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சிகள் உரிய தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் இந்த புதிய நடைமுறை ஊரக உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் எதிர்வரும் குத்தகை காலத்தின் போது நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

மீண்டும் இணையும் சூப்பர்ஹிட் கூட்டணி

Wed Jun 21 , 2023
தனுஷ் முதன் முதலில் ஆனந்த் எல். ராய் என்பவரின் இயக்கத்தில் ராஞ்சனா எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் அட்ராங்கி ரே. இப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது மீண்டும் இதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஆம், இந்தியில் தனுஷ் நடிக்கப்போகும் நான்காவது படமாக […]

You May Like