fbpx

குட் நியூஸ்… தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!

ரேஷன் கடைக்கு உட்புறமும், வெளிபுறமும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்‌ திட்டம்‌ / சிறப்பு பொது விநியோகத்‌திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌ கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. பொருட்களை வாங்கும் மக்களுக்கும் விற்பனையாளர்களுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் ரேஷன் கடை விற்பனையாளர் மக்களை தரக்குறைவாக நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்ததை‌ அடுத்து, இதனை போக்க கூட்டுறவுத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து கூட்டுறவுத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; ரேஷன் கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவோடும், மரியாதையோடும் நடந்துகொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக்கூடாது.

மேலும் ரேஷன் கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், சண்டையிடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, ரேஷன் கடைக்கு உட்புறமும், வெளிபுறமும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தோல்களில் ஏற்படும் கொழுப்புக் கட்டி, எப்படி வருது தெரியுமா.? அதைக் கரைக்க சில டிப்ஸ்.!

Fri Nov 17 , 2023
கொழுப்பு மனித உடலுக்கு மிகவும் தீமை விளைவிக்கக் கூடிய ஒன்றாகும். நம் உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்பு சேரும்போது உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நோய்கள் உடலில் உருவாகும். சில நேரங்களில் இந்த அதிகப்படியான கொழுப்பு நம் தசைகளுக்கு அடியில் சேர்ந்து கொழுப்பு கட்டிகளாக மாறி தொந்தரவு செய்யும். இவற்றை மருந்துகள் இல்லாமல் இயற்கை முறையில் எவ்வாறு குணப்படுத்தலாம் என்று […]

You May Like